பாண்டி. சட்டசபையில் தற்கொலைக்கு முயன்ற சப்-இன்ஸ்பெக்டர்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் ஐ.ஜியிடம் புகார் கொடுக்க சென்ற உதவி சப் இன்ஸ்பெக்டரை, சஸ்பெண்ட் செய்வதாக ஐ.ஜி மிரட்டியதால்விரக்தியடைந்த அவர் சட்டசபை வளாகத்திற்குள் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்ய முயன்றார்.
பாண்டிச்சேரி போக்குவரத்துப் பிரிவு காவல்துறையில் உதவி சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் கோவிந்தசாமி. இவரை எஸ்.பி ஏதோதிட்டியுள்ளார். இதுகுறித்து ஐ.ஜி. சிங்கிடம் புகார் கொடுக்க கோவிந்தசாமி சென்றார்.
அப்போது உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை கேட்டு நடக்காமல் அவர் மீது புகார் தர வந்தாயா என்று கேட்ட ஐ.ஜி., உன்னை சஸ்பெண்ட்செய்யப் போகிறேன் என்று கூறியதாகத் தெரிகிறது.
இதனால் வெறுப்படைந்த கோவிந்தசாமி, நேராக சட்டசபை வளாகத்திற்குள் உள்ள பத்திரிக்கையாளர் அறைக்கு வந்தார். பின்னர் கையோடுகொண்டு வந்திருந்த தூக்க மாத்திரைகளைப் போட்டு தற்கொலை செய்ய முயன்றார்.
அவரை பத்திரிக்கையாளர்கள் தடுத்து மாத்திரைகளைப் பறித்தனர். போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் ஓடி வந்தனர். கோவிந்தசாமியை சமாதானப்படுத்தி ஐ.ஜி. அறைக்குக் கூட்டிச் சென்றனர். அங்குஅவர் சஸ்பெண்ட் செய்யப்பட மாடடார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு கோவிந்தசாமி வீடு திரும்பினார்.
ஒரு போலீஸ்காரர் சட்டசபை வளாகத்தில் பத்திரிக்கையாளர்கள் முன்பு தற்கொலை செய்ய முயன்ற இந்தச் சம்பவம் பாண்டிச்சேரியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications