For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மும்பை- கன்னியாகுமரி ரயில் தடம்புரண்டது: 23 பேர் காயம்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

மும்பை- கன்னியாகுமரி ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் (எண்- 1081) கர்நாடக மாநிலம் வாடி என்ற இடத்தில்தடம் புரண்டது. இதில் 23 பயணிகள் காயமடைந்தனர். இவர்களில் 2 பேரின் நிலைமை ஆபத்தான நிலைமையில்உள்ளதாகக் கூறப்படுகிறது.

நேற்று மாலை 3.15 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்ட அந்த ரயில் இன்று காலை 4 மணிக்கு குல்பர்கா ரயில்நிலையம் வந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. காலை 5.30 மணிக்கு குல்பர்கா மாவட்டத்தில் வாடிரயில் நிலையத்தைத் தாண்டி சென்று கொண்டிருந்தது.

வாடிக்கும் நல்வாட் என்ற இடத்துகும் இடையே சென்ற போது இந்த ரயிலின் 10 பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு இறங்கி தடம் புரண்டன. தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் தூக்கி எறியப்பட்டனர்.

தடம்புரண்டதில் 8 பெட்டிகள் 2ம் வகுப்பு ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகளாகும். ஒரு பெட்டி அன்-ரிசர்வ்ட் பெட்டி.இன்னொன்று கார்டின் பெட்டி.

பெட்டிகளும் ஒன்றின் மீது ஒன்று மோதின. இதனால் பயணிகள் அச்சத்தில் அலறினர். தரையில் இறங்கி ஓடியரயில் சிறிது தூரம் சென்று நின்றது. இதில் 23 பேர் காயமடைந்தனர். இதில் 18 பேருக்கு முதலுதவி சிகிச்சைஅளிக்கப்பட்டது.

மற்ற 5 பேரும் குல்பர்கா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேருக்கு படுகாயம்ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தினால் அந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை எக்ஸ்பிரஸ் (எண்7031),நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (1091) உள்பட 6 ரயில்கள் செகந்திரபாத் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X