விசா வழங்க கட்டுப்பாடுகளை தளர்த்தியது பிரிட்டன்
டெல்லி:
இங்கிலாந்துக்குச் செல்ல விசா வழங்குவதில் விதித்திருந்த கட்டுப்பாடுகளை அந் நாடு தளர்த்தியுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உச்சகட்டத்தை எட்டியபோது விசா வழங்குவதில் பலகட்டுப்பாடுகளை பிரிட்டன் அறிமுகப்படுத்தியது. தூதரக ஊழியர்களையும் திரும்ப அழைத்தது.
பெற்றோரைச் சந்திக்கவும், குழந்தைகளை சந்திக்கச் செல்லும் மட்டுமே விசாக்கள் வழங்கப்பட்டன.
இப்போது இந்தக் கட்டுபாடுகள் சிலவற்றை பிரிட்டன் தளர்த்தியுள்ளது. இப்போது டிராப் பாக்ஸ் கேட்டகரி என்றுஅழைக்கப்படும் அவசரமாக செல்ல விரும்புவோர், பிரிட்டனில் நிரந்தரமாகக் குடியேற விரும்புவோர்ஆகியோருக்கு விசாக்கள் வழங்க தூதரகம் முன் வந்துள்ளது.
தீவிரவாதிகள் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும்:
இந் நிலையில் தீவிரவாதிகளை ஆதரிப்பதை பாகிஸ்தான் முழுமையாகக் கைவிட்டால் மட்டுமே காஷ்மீர்பிரச்சயைைத் தீர்க்க முடியும் என பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் கூறியுள்ளார்.
லண்டனில் நிருபர்களிடம் பேசிய அவர்,
இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தித் தான் காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க முடியும். ஆனால், முதலில்தீவிரவாதத்தை ஆதரிப்பதை பாகிஸ்தான் நிறுத்தியாக வேண்டும். இந்தியாவுக்கு தீவிரவாதிகளை ஏற்றுமதிசெய்வதையும் நிறுத்த வேண்டும். இது நடந்தால் தான் இந்தியா பேச்சுவார்த்தை முன் வரும்.
சரியான நேரத்தில் நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேக் ஸ்ட்ரா இரு நாடுகளுக்கும் சென்று போரை தவிர்க்கஉதவினார்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றம் நிலவியபோது இரு நாடுகளுக்கும் இங்கிலாந்து ஆயுதங்களைஏற்றுமதி செய்ததாக சிலர் புரளியைக் கிளப்பி விட்டுள்ளனர்.
உண்மையைச் சொல்கிறேன், அப்படி எந்த காரியத்தையும் இங்கிலாந்து செய்யவில்லை. அதற்காக காஷ்மீர்பிரச்சனை தீரும் வரை இங்கிலாந்து தனது ஆயுதத் தொழிற்சாலைகளை மூடிவிடவா முடியும்?
இரு நாடுகளுக்கும் நாம் ஆயுதங்கள் தருகிறோம். ஆனால், போர் அபாயம் சூழந்தபோது நாம் ஆயுதம் தரவில்லைஎன்றார் பிளேர்.












Click it and Unblock the Notifications