கை நீட்டினால் நிற்கும் டவுன் பஸ்: "டிராபிக்" ராமசாமி வழக்கு
சென்னை:
கை காட்டினால் நின்று மக்களை ஏற்றிச் செல்லும் டவுன் பஸ்களுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் "டிராபிக்"ராமசாமி என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
சென்னையில் சமீபத்தில் 5 வழித்தடங்களில் புதிய டவுன் பஸ்கள் சோதனைரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பஸ்களை எங்குவேண்டுமானாலும் கை காட்டி நிறுத்தி ஏறிக் கொள்ளலாம் என்பதால் மக்களுக்கு மிகுந்த வசதியாக இருந்து வருகிறது.
இந்த சேவையை நகர் முழுவதும் அறிமுகப்படுத்தவும் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
ஆனால், இந்த பஸ்களுக்குத் தடை விதிக்கக் கோரி "டிராபிக் ராமசாமி" என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பொதுவாகவே அரசு பஸ்களால் தான் சென்னை நகரில் அதிக விபத்துக்கள்நடக்கின்றன. தனியார் வாகனங்களின் பங்கு இதில் மிகவும் குறைவு தான்.
இந்த நேரத்தில் புதிதாக எங்கு கை காட்டினாலும் நிற்கும் பஸ்களை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிமுகம் செய்துள்ளது. இதனால்விபத்துக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
பஸ்கள் திடீர் திடீரென நின்றால் பின்னால் வரும் வாகனங்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும். எனவே இந்த பஸ்களுக்குக் கோர்ட் தடைவிதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார் டிராபிக் ராமசாமி.
மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் சுபாஷன் ரெட்டி, முருகேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதுகுறித்து 3 வாரத்திற்குள் பதில்அனுப்புமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications