பேப்பரில் சுருட்டி.. வாழை இலையால் மூடி சாலையில் கிடந்த உயிர்
சென்னை:
பிறந்து ஒரு நாளேஆன பெண் சிசு செய்தித்தாளில் வைத்து சுருட்டப்பட்டு, வாழை இலையால் மூடப்பட்டு சாலையோரம் அனாதையாகபோடப்பட்டிருந்தது.
சென்னை அருகே உள்ள பாடிபுதுநகர் பகுதியில் இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. பாடி புதுநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்கடைக்கு போவதற்காக சாலையில் நடந்து கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் இருந்த பேப்பர் பார்சல் ஒன்றிலிருந்து குழந்தையின்அழுகுரல் கேட்டது.
இதையடுத்து அந்த பார்சலைத் திறந்து பார்த்த அந்தப் பெண் பதறிப் பாய் விட்டார்.
பிறந்து ஒரு நாளே ஆன, வயிற்றில் தொப்புள் கொடி கூட இன்னும் விழாத நிலையில் இருந்த ஒரு பெண் குழந்தை அந்த பார்சலில்வைக்கப்பட்டிருந்தது. செய்தித் தாளால் சுருட்டப்பட்டு, மேலே வாழை இலையை வைத்து அது பறந்து விடாமல் இருப்பதற்காக ஒரு சிறுகல்லும் வைக்கப்பட்டிருந்தது.
இதைக் கண்டு பதறிப் போன அந்தப் பெண்மணி, தரையில் கிடந்த அந்தக் கண்மணியை எடுத்துக் கொண்டு குழந்தைகள் உதவி மையதொலைபேசி (1098) எண்ணுக்கு போன் செய்தார். பின்னர் அருகிலுள்ள ஜெ.ஜெ. நகர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகாரும்கொடுத்தார்.
உதவி மையத்தினரும் போலீசாரும் வரும் வரை அக் குழந்தையை எடுத்து மடியில் வைத்து கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தார் அந்தப்பெண். பின்னர் அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்தார்.
குழந்தை நன்றாக உள்ளதாகவும் தற்போது ஒரு பாதுகாப்பு இல்லத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும், குழந்தைகள் உதவி மைய இயக்குனர்பாஸ்கோ கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications