ஈவ் டீசிங் செய்தால் ஜெயில்: சென்னை போலீஸ் கமிஷனர் கடும் எச்சரிக்கை
சென்னை:
ஈவ் டீசிங்கில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர்விஜயக்குமார் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள், கல்லூரிகள் திறந்துள்ளன. இதையடுத்து பெண்கள் பள்ளிகள் மற்றும்கல்லூரிகள் முன்பு சாதாரண உடையில் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மாணவிகள் மற்றும் பெண்களைக் கேலி செய்வோர் உடனடியாக பிடிக்கப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்படுவர்.குறைந்தபட்ச சிறைத் தண்டனை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, கல்லூரிகளில் ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் கேலி செய்யும் "ராகிங்" போன்றநடவடிக்கைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அது சம்பந்தமான புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சாலைகளில் பெண்கள் மற்றும் மாணவிகள் ஓட்டிச் செல்லும் டூ வீலர்களை இளைஞர்கள் தங்களது மோட்டார்சைக்கிள்களில் இடிப்பது போல செல்வதும், கேலி செய்வதும் அதிகரித்து வருகிறது. அதுபோன்ற இளைஞர்கள்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் விஜயக்குமார்.












Click it and Unblock the Notifications