மேயரானார் கராத்தே

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகராட்சியின் துணை மேயராக உள்ள கராத்தே தியாகராஜன் இன்று (வெள்ளிக்கிழமை) தற்காலிக மேயராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

பகல் 12 மணிக்கு அவருக்கு தற்காலிக மேயராக அவர் பொறுப்பேற்றார். அவருக்கு ஆணையர் கலைவாணன் பதவிப் பிரமாணம் செய்துவைத்து பொறுப்புக்களை வழங்கினார். இந் நிழ்ச்சியில் திமுக கவுனசிலர்கள் கலந்து கொள்ளவில்லை.

இதையடுத்து அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து ஆராவாரம் செய்தனர். அதிமுக கவுன்சிலர்கள் அவருக்கு சால்வைள், மாலைகள்அணிவித்து வாழ்த்தினர்.

மாநகராட்சி மன்றக் கூட்டம் வரும் 26ம் தேதி நடக்கவுள்ளது. அந்தக் கூட்டத்திற்கு கராத்தே தியாகராஜன் தலைமை வகித்து நடத்துவார்.

அப்போது திமுக கவுன்சிலர்களால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்படலாம். இதுவரை அதிமுக கவுன்சிலர்கள் ஸ்டாலினுக்கு கொடுத்த வந்ததொல்லையை இனி திமுக கவுன்சிலர்கள் கராத்தேவுககு தருவார்கள்.

ஸ்டாலினிடம் இருந்து பதவி பறிக்கப்பட்தையடுத்து அடுத்த மேயர் தேர்தல் நடத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் தீர்ப்புவரும் வரை தியாகராஜன் தான் மேயராக பொறுப்பு வகிப்பார்.

இன்று பதவி ஏற்புக்காக ஒயிட் பேண்ட்ஸ், ஒயிட் சட்டையுடன் பளிச் என்ற வந்திருந்தார் கராத்தே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+