யார்.... நாங்களா?: கருணாநிதி
சென்னை:
எங்களுக்கு எத்தனை பதவி தந்தாலும் திருத்தியடைய மாட்டோம் என்று பேசி இருப்பதன் மூலம் ஜெயலலிதாதனது வரலாறு தெரியாது என்பதை நிரூபித்துவிட்டார் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
பதவி தான் பெரிதென்று நான் நினைத்திருந்தால் என்னைக் கைது செய்தபோது ஜெலலிதாவின் ஆட்சியைக்கலைக்கச் சொல்லியிருப்பேன் என்றார் கருணாநிதி.
இன்று ஒரு திருமண நிகழ்ச்சியில் பேசிய கருணாநிதி,
கடந்த ஆண்டு இதே மாதத்தில் தான் என்னை ஜெயலலிதா என்னென்னவோ வகையில் (நள்ளிரவில் கைது)அவமானப்படுத்தினார். அப்போது நான் நினைத்திருந்தால் ஜெயலலிதாவின் ஆட்சியைக் கலைக்கச்செய்திருப்பேன்.
ஆனால், 356வது பிரிவைப் பயன்படுத்தி ஆட்சிக் கலைப்பு செய்வதை நான் விரும்பவில்லை என்று கூறிவிட்டேன்.அதனால் தான் ஜெயலலிதாவின் ஆட்சி தப்பியது.
எனது கட்சியினரின் வற்புறுத்தலையும் மீறி நான் ஆட்சியைக் கலைக்க மத்திய அரசை நெருக்கவில்லை. ஜெயிலில்இருந்து வெளியே வந்தபோது கூட இந்த ஆட்சியைக் கலைக்கக் கூடாது என்று தான் கூறினேன்.
பஞ்சாயத்துப் பதவியில் இருந்து ஜனாதிபதி பதவி வரை எத்தனை பதவிகள் தந்தாலும் திமுகவினர் திருப்தியடையமாட்டார்கள் என்று அந்த அம்மையார் கூறியிருக்கிறார். இதன் மூலம் கடந்த காலம் குறித்து ஞானமில்லாதவர்என்பதைக் காட்டிவிட்டார்.
வி.வி. கிரி, சஞ்சீவ ரெட்டி, ஜெயில் சிங் ஆகியோரை ஜனாதிபதியாக்கியதில் முக்கிய பங்கு வகித்த கட்சி திமுக.இப்போதைய ஜனாதிபதி கே.ஆர். நாராயணனை ஜனாதிபதி பதவிக்கு முன்மொழிந்தது நானும் மறைந்தமூப்பனாரும் தான் என்பதை அந்த அம்மையாருக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
பதவிக்காக நாங்கள் என்றும் எப்போதும் அலைந்தது இல்லை என்றார் கருணாநிதி.