ரஜினி வீட்டில் திருடியவன் மீண்டும் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகர் ரஜினி காந்த் வீடு உள்பட பல வீடுகளில் கொள்ளையடித்த திருடன் இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்டான்.
அவனிடமிருந்து ரூ. 40 லட்சம் பெறுமானள்ள பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
திருவான்மியூர், பெசன்ட் நகர், அடையாறு பகுதிகளில் அடிக்கடி திருட்டுப் போய் வந்தது. இதையடுத்து போலீஸார் தனிப்படை அமைத்துதிருடனைத் தேடி வந்தனர்.
இந் நிலையில் முருகேசன் என்ற 23 வயது வாலிபர் பிடிபட்டார். அவர்தான் இந்தப் பகுதிகளில் திருடி வந்தார் என்று தெரியவந்தது.அவனிடம் விசாரணை நடத்தி ரூ. 40 லட்சம் மதிப்புள்ள நகை, பணம், பொருட்களை போலீசார் மீட்டனர்.
இதே முருகேசன் முன்பு ஒருமுறை நடிகர் ரஜினிகாந்த் வீட்டிலும் திருடி பின்னர் பிடிபட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications