ஐ.நாவில் இந்தியாவிடம் மூக்குடைபட்ட பாக், மெக்சிகோ
ஐக்கிய நாடுகள் சபை:
ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் குறித்து நடக்க இருந்த கலந்தாய்வுக் கூட்டம் (செமினார்) இந்தியா மற்றும்ரஷ்யாவின் எதிர்ப்பினால் ரத்து செய்யப்பட்டது.
காஷ்மீர் விவகாரம் இரு நாட்டுப் பிரச்சனை. இதில் மூன்றாவது நாடு தலையிடக் கூடாது என்று இந்தியா கூறிவருகிறது. இந்த விவகாரத்தை சர்வதே அளவில் பிரச்சனையாக்குவதையும் இந்தியா விரும்பவில்லை.
ஆனால், காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக்க பாகிஸ்தான் தொடர்ந்து முயன்று வருகிறது.
இந் நிலையில் ஐ.நா. சபையின் பாதுகாப்புக் கவுன்சிலின தாற்காலிக உறுப்பு நாடுகளில் ஒன்றான மெக்சிகோவின்உதவியுடன் இந்தப் பிரச்சனையை பாதுகாப்பு கவுன்சில் முன் இன்று மறைமுகமாக முன் வைத்தது. காஷ்மீர் குறித்தசெமினார் என்ற பெயரில் ஒரு கூட்டத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்துக்கு மெக்சிகோ ஏற்பாடு செய்தது. ஆனால், இந்தக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக இந்தியாஅறிவித்தது. இதைத் தொடர்ந்து ரஷ்யாவும் இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தது. புறக்கணிப்பதோடுமட்டுமல்லாமல் கூட்டத்துக்கு தனது எதிர்ப்பையும் தெரிவித்தது.
அதே போல பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக உள்ள மொரீஷியசும் இந்தக் கூட்டத்துக்கு எதிராக தனதுகண்டனத்தைத் தெரிவித்தது.
மெக்சிகோவின் இந்தச் செயலுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டத்துக்கு மெக்சிக்கோஅழைத்திருந்த பிரநிதிகள் பலரும் இந்திய எதிர்ப்பு நிலை கொண்டவர்கள்.
இதனால் ஐ.நாவில் உள்ள இந்திய அதிகாரிகள் ரஷ்யாவுடனும் ஐ.நா. சபை அதிகாரிகளுடனும் பேசினர்.இதையடுத்து ஐ.நா. சபை தனது நிகழ்ச்சி நிரலில் இந்தக் கூட்டத்தை குறிப்பிடாமல் தவிர்த்துவிட்டது. இது தவிரபாதுகாப்பு கவுன்சிலில் உள்ள அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் இது தேவையில்லாத வேலை எனமெக்சிகோ அதிகாரிகளைக் கண்டித்தனர்.
மேலும் திடீரென பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினர்களிடையே பேசிய தலைமை நாடான மொரிஷியஸ் பிரதிநிதிகாஷ்மீர் விவகாரம் இரு நாட்டுப் பிரச்சனை. இதை இந்தியாவும் பாகிஸ்தானும் தன் பேச வேண்டும் என்றார்.அதை அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டன.
அனைத்துத் தரப்பிலும் எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து இந்தக் கூட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டது மெக்சிக்கோ. அந்த நாட்டைத் தூண்டிவிட்ட பாகிஸ்தானும் அடங்கியது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications