For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடக முதல்வருடன் பாமக எம்.பிக்கள் சந்திப்பு

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

காவிரியில் நீர் திறந்துவிடக் கோரி கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவை பாட்டாளி மக்கள் கட்சியின் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் குழுஇன்று (சனிக்கிழமை) சந்தித்துப் பேசியது.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையிலான இந்தக் குழு முதல்வர் கிருஷ்ணாவை நேரில் சந்தித்தது. இக் குழுவில்எம்.பிக்களான மூர்த்தி, பொன்னுசாமி, சண்முகம், எம்.எல்.ஏக்கள் உள்பட 21 பேர் இடம் பெற்றிருந்தனர்.

காவிரிப் பாசன விவசாயிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளதை இந்தக் குழுவினர் கிருஷ்ணாவிடம் விளக்கினர். உடனடியாக தண்ணீர்திறந்து விடுமாறு கேட்டுக் கொண்டனர்.

ஆனால், மைசூர் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டில் போதிய அளவு தண்ணீர் இல்லாததை பா.ம.கவினரிடம் சுட்டிக் காட்டிய கிருஷ்ணா,இப்போதைக்கு நீர் விட முடியாத நிலையில் இருப்பதாகக் கூறினார்.

காவிரி நதி நீர் ஆணையத்தில் இருந்து தமிழகம் விலகாமல் இருந்திருக்கலாம் என்றும் அவர் பா.ம.கவினரிடம் கூறினார்.

ஜெயலலிதாவுக்கு ராமதாஸ் எதிர்ப்பு:

இந் நிலையில் காவிரி நதி நீர் ஆணையத்தை புறக்கணிக்கவும், நீர் விடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்தொடரவும் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்தியின் நிறுவனர் ராமதாஸ் கடும் எதிர்ப்புத்தெரிவித்துள்ளார்.

பிரச்சனைக்கு தீர்வு காண்பதைவிட்டுவிட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக அரசு இந்ததேவையில்லாத செயலில் இறங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார். உண்மையிலேயே இந்த அரசுக்கு அக்கறைஇருதிருந்தால் கடந்த பிப்ரவரி, ஏப்ரல் மாதங்களில் காவிரி தொடர்பான இன்னொரு வழக்கு விசாரணைக்குவந்தபோதே அதை வேகமாக விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருக்க வேண்டும்.

திமுக செய்ததற்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் தான் ஜெயலலிதா ஆர்வம் காட்டுகிறார். இதனால்தான் நதி நீர் ஆணையத்தை புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறார்.

வழக்கு தொடரும் எண்ணத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X