சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவுப்படி தமிழகத்துக்கு உரிய நீரை வழங்குமாறு கர்நாடகத்துக்குஉத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தமிழகம் முடிவெடுத்துள்ளது.
தமிழகத்துக்கு நீர் விடக் கோரி காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவையும், அந்த மன்றம்பிறப்பிக்கப் போகும் இறுதி ஆணையையும் முறையாக அமல்படுத்தக் கோரி கர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரிஉச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடருகிறது.
காவிரி விஷயத்தில் தமிழகம் தந்துள்ள புதிய வரைமுறைகளை அமலாக்குமாறு நடுவர் மன்றத்துக்கு மத்திய அரசுஉத்தரவிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தை வலியுத்த தமிழகம் முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications