இது குமரி ஸ்டைல்: சுற்றுலா பயணிகளுக்கு மரம் ஏறும் பயிற்சி
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிக்கு மரம் ஏறுவது எப்படி என்பது குறித்துப் பயிற்சிஅளிக்கும் நூதனத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மாவட்ட வன அதிகாரி அன்வர்தீன் இதுகுறித்து நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களை அதிக அளவில்ஈர்க்கும் பொருட்டு குமரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மரம் ஏறுவது எப்படி என்பது குறித்துபயிற்சி அளிக்கும் நூதனத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
மாவட்டத்தின் 5 இடங்களில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்.
குமரி மாவட்டத்தில் சிறுத்தை, கடமான் ஆகிய விலங்குகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளதுஎன்றார் அன்வர்தீன்.












Click it and Unblock the Notifications