தமிழக அரசின் முடிவு துரதிருஷ்டவசமானது: மத்திய அரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரிப் பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக தமிழக அரசு கூறியிருப்பதுதுரதிருஷ்டவசமானது என்று மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரான வெங்கையா நாயுடு கூறினார்.
சென்னையில் அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
உச்ச நீதிமன்றத்திற்குப் போக வேண்டும் என்று தமிழக அரசு முடிவெடுத்து விட்டால் அதைத் தடுக்க யாராலும்முடியாது.
ஆனால் சுமூகமான முறையில் கர்நாடக அரசுடன் பேசி காவிரிப் பிரச்சனைக்குத் தீர்வு காணவே தமிழக அரசுமுயற்சித்திருக்க வேண்டும்.
பிரதமர் வாஜ்பாய் இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு தான் வருகிறார்.
ஆனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாகத் தமிழக அரசு கூறியிருப்பது துரதிருஷ்டவசமானது.இதற்கு மேல் நான் வேறு எதுவும் இப்பிரச்சனை குறித்துப் பேச விரும்பவில்லை என்றார் வெங்கையா நாயுடு.












Click it and Unblock the Notifications