சொத்து சேர்ப்பு வழக்கு: சி.பி.ஐ. விசாரிக்க தாமரைக்கனி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்கள் சேர்த்தது தொடர்பாக தன் மீது தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கைமாநில அரசு விசாரிக்காமல் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் அதிக எம்.எல்.ஏ.தாமரைக்கனி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக தாமரைக்கனி தாக்கல் செய்துள்ள மனுவில்,

நான் கடந்த 2001ம் ஆண்டு வரை அதிமுகவில் உறுப்பினராக இருந்தேன். அதே ஆண்டு நடந்த சட்டசபை பொதுத்தேர்தலின்போது நான் சுயேச்சை வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தேன். இதனால் கோபமுற்ற கட்சி பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்னை கட்சியிலிருந்து நீக்கினார்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு நான் திமுகவில் சேர்ந்தேன். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவர் பதவிக்குப்போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இந்த நிலையில் விருதுநகர் பிரிவு ஊழல் கண்காணிப்புத் துறை அதிகாரிகள்எனது வீட்டுக்கு வந்து கடந்த 1989ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் 2001ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதிவரையிலான காலகட்டத்தில் நான் வாங்கிய சொத்துக்கள் குறித்த விவரத்தைத் தருமாறு கூறி விட்டுச் சென்றனர்.

இதுதொடர்பாக நான் உரிய பதிலும் அளித்தேன். ஆனால் அதை ஏற்காமல், தீவிரமாக விசாரிக்காமல் என் மீதுஅதிக சொத்துக்கள் சேர்த்து விட்டதாக வழக்குப் போட்டுள்ளனர்.

இந்த நிலையில் அதிமுக அரசின் கீழ் இயங்கி வரும் ஊழல் கண்காணிப்புத் துறையிடமிருந்து நியாயமான,நேர்மையான விசாரணையை எதிர்பார்க்க முடியாது. எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடவேண்டும் என்று கோரியுள்ளார் தாமரைக்கனி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+