2 கோவில்களுக்கு ஜெ.2 மாத ஊதியம் நன்கொடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கோவில் அன்னதானத் திட்டத்திற்கு தனது 2 மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
கடந்த மார்ச் 23ம் தேதி தமிழகம் முழுவதிலும் 63 கோவில்களில் இந்த அன்னதானத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தத் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் நன்கொடைகள் வழங்கி வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதாவும் தனது ஒவ்வொருமாத சம்பளத்தை ஒவ்வொரு கோவிலுக்கு நன்கொடையாக வழங்கி வருகிறார்.
தனது ஏப்ரல் மாத சம்பளத்தை மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலுக்கும், மே மாத சம்பளத்தை விழுப்பும் ஆஞ்சநேயர்கோவிலுக்கும் நன்கொடையாக வழங்கியுள்ளார் முதல்வர்.
ஜெயலலிதாவின் மாத சம்பளம் ரூ. 10,000 ஆகும்.












Click it and Unblock the Notifications