அரசை எதிர்க்க உருவானது உழைப்பாளர் சம்மேளனம்
சென்னை:
தமிழகத்திலுள்ள அனைத்து தொழிற்சங்கங்கள், அரசு ஊழியர் அமைப்புகள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்துஉழைப்பாளர் சம்மேளனம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன.
ந்த புதிய அமைப்பு, மத்திய, மாநல அரசுகளின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகள், போக்கை எதிர்த்துப்போராடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 15ம் தேதிக்குள் புதிய அமைப்பின் கிளைகளை மாவட்டம் தோறும் ஆரம்பிக்கவும் தொழிற்சங்கங்கள்அறிவுறுத்தப்பட்டுள்ளன. புதிய அமைப்பின் முதல் போராட்டம் ஜூலை 30ம் தேதி தமிழகம் முழுவதிலும் நடக்கிறது.
தமிழக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து மாவட்டம் தோறும் அன்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டம்நடத்தப்படும்.
சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர்களான செ.குப்புசாமி, டி.கே.ரங்கராஜன், தியாகராஜன் ஆகியோர் இத்தகவலைத்தெரிவித்தனர்.
தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் தொழிற் சங்கங்கள் பிரிந்து கிடப்பதால்பயனில்லை என்பதால் அனைத்துத் தொழிற்சஙகங்களும் கூட்டாக இணைந்துள்ளன.
அதிமுக தவிர பிற கட்சிகளைச் சேர்ந்த அனைத்துத் தொழிற் சங்கங்களும் இப்போது ஒன்றாகியுள்ளன.












Click it and Unblock the Notifications