For Daily Alerts
Just In
கருணாநிதி கவிதைக்கு கலாம் நன்றி
சென்னை:
ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் அணு விஞ்ஞானி "பாரத ரத்னா" அப்துல் கலாமைப் பாராட்டி திமுகதலைவர் கருணாநிதி எழுதியிருந்த கவிதைக்கு நன்றி தெரிவித்து கலாம் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் கலாம் கூறியுள்ளதாவது:
தங்களுடைய 10.06.2002ம் தேதியிட்ட கடிதம் கிடைத்தது. தங்களுடைய நல்லாசிக்கும், ஆதரவுக்கும் என்னுடையமனமார்ந்த நன்றி.
தாங்கள் வார்த்த கவிதை என் உள்ளத்தை உருக்கியது.
"இராமேஸ்வரம் கடற்கரையில் மோதுகின்ற அலைகள் கூட இன்று மலையளவு உயர்கின்றன" என்ற கவிதைவரிகளை நான் பல முறை படித்து ரசித்தேன்.
என் சுற்றத்தினரும் நண்பர்களும் இந்தக் கவிதையைப் படித்து மகிழ்ந்தனர். ஒரு அறிஞரால், நல்ல கவிஞரால்வார்க்கப்பட்ட கவிதையை நினைத்து நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன் என்று கலாம் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.
Comments
Story first published: Thursday, July 17, 2008, 15:10 [IST]