கிருஷ்ணகிரியில் இரு சமூகத்தினர் பயங்கர மோதல்: போலீஸ் குவிப்பு
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் இரு சமூகத்தினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்டவர்கள்படுகாயமடைந்தனர். பல ஆட்டோக்கள் சேதப்படுத்தப்பட்டன.
இங்கு கடந்த 10 நாட்களாக மலர்க் கண்காட்சி நடந்தது. இதன் இறுதி நிகழ்ச்சியாக கலை நிகழ்ச்சிகள்நடத்தப்பட்டன. அப்போது அதைப் பார்த்துக் கொண்டிருந்த இரு குழுவினருக்கு இடையே வாக்குவாதம்ஏற்பட்டது.
இது பெரும் மோதலாக வெடித்தது. இரு தரப்பினரும் கல் வீச்சில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் ஆதரவாகஅவர்களது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூடிவிடவே கல்வீச்சு மேலும் வலுவடைந்தது. சோடா பாட்டில்களும்பறந்தன.
இதில் கலை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தவர்களும் அடி விழுந்தது. அங்கு போடப்பட்டிருந்த நாற்காலிகள்ஏவுகணைகளாக பல திசைகளி பறந்தன.
வெளியே நின்று கொண்டிருந்த ஆட்டோக்களையும் இந்தக் கும்பல்கள் தாக்கி உடைத்தன. பல ஆட்டோக்ளைகுப்புறக் கவிழ்த்தி அதன் கண்ணாடியை உடைத்தனர்.
இதனால் மக்கள் சிதறி ஓடினர். தொடர்ந்து அங்கிருந்த கடைகளுக்குள்ளும் நுழைந்து அதையும் இந்த வெறிக்கும்பல்கள் சூறையாடின. பல அப்பாவி மக்களுக்கும் அடி விழுந்தது.
இந்தச் சம்பவத்தால் பெரும் வன்முறை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார்குவிக்கப்பட்டனர். போலீசார் வந்த பின்னர் தான் இந்தக் கும்பல் அடங்கியது.
இப்போதும் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு தொடர்ந்து போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications