For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பி.இ., பி.டெக் மாணவர் சேர்க்கை தொடங்கியது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் இன்று நடந்து வருகிறது.

கடந்த 24ம் தேதி பி.ஆர்க் மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடந்தது. 25,26ம் தேதிகளில் வொகேசனல் பிரிவுமாணவர்களுக்கான கவுன்சிலிங் நடந்தது.

இன்று முதல் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பி.ஈ. மற்றும் பி.டெக் படிப்புகளில் சேருவதற்கான கவுன்சிலிஙதொடங்கியது.

சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூரில் நடந்து வரும் இந்த கவுன்சிலிங்கில் சுமார் 53,000 மாணவர்கள்போட்டியிடுகின்றனர். முதன்முறையாக இந்த கவுன்சிலிங் 4 நகரங்களில் நடக்கிறது.

இந்த ஆண்டும் பி.இ. எலெக்ட்ரானிஸ் அன்ட் கம்யூனிகேசன் பாடப் பிரிவில் சேருவதற்கு தான் மாணவ-மாணவிகள் போட்டியிட்டு வருகின்றனர்.

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மொத்தம் 52,600 பி.இ. இடங்கள் உள்ளன. இதில் 30,310 இடங்கள்இலவசமாக ஒதுக்கப்படும் இடங்கள். 22,220.

ஆனால், மொத்தம் அரசு முதலில் அறிவித்த தகுதி மதிப்பெண் (கட்-ஆப்) அடிப்படையில் வெறும் 37,000மாணவர்கள் தான் தேறினர். அந்த அடிப்படையில் கவுன்சிலிங்குக்கு தேர்வான மாணவர்களைவிட சீட்கள்அதிகமாக இருந்தன.

இதனால் மாணவர்களின் தகுதி மதிப்பெண் பெருமளவு குறைக்கப்பட்டது. இதனால் கூடுதலாக 15,000மாணவர்கள் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வாய்ப்பு உண்டானது.

இந்த 15,000 பேரையும் சேர்த்து கவுன்சிலிங்குக்கு சுமார் 53,000 பேர் தான் தேறியுள்ளனர். கல்லூரிகளில் 52,600இடங்கள் உள்ளனர். இதனால் கவுன்சிலிங்குக்கு வந்துவிட்ட பெரும்பாலானவர்களுக்கு இடம் கிடைத்துவிடும்.

இம் மாத இறுதிவரை இந்தக் கவுன்சிலிங் நடக்கும்.

திருச்சி, கோயம்புத்தூரில் இன்று கவுன்சிலிங் தொடங்குவதில் பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. கம்யூட்டர்நெட்வோர்க் ஏற்படுத்துவதில் சிக்கல் எழுந்ததால் காலை 10 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய இந்தகவுன்சிலிங் பிற்பகல் 2.30 மணிக்குத் தான் தொடங்கியது. இதனால் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X