For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இரவோடு இரவாக மாற்றம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக அரசு மீண்டும் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இரவோடு இரவாக மாற்றம் செய்துள்ளது.

சமீபத்தில் தான் 70க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட்டனர். தொடர்ந்து ஐ.பி.எஸ்.அதிகாரிகளும் மாற்றம் செய்யப்பட்டனர்.

நேற்றிரவு தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின் விவரம்:

இதுவரை தொழிதுறை ஆலோசனை மையத்தின் தலைவராக இருந்த சுந்தரதேவன் புதிய நிதித்துறைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை நிதித்துறைச் செயலாளராக இருந்த தேபேந்திர நாத் சாரங்கி வணிக வரித்துறைச்செயலாளராக்கப்பட்டுள்ளார்.

உப்பு வாரியத்தின் தலைவராக இருந்த சந்திர பிரகாஷ் சிங் சுற்றுலாத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல மேலும் சில அதிகாரிகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X