தாமரைக்கனி கைது: அதிமுக தொண்டரை கொல்ல முயன்றதாக மகன் புகார்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீவில்லிபுத்தூர்:

அதிமுக தொண்டரைக் கொலை செய்ய முயற்சி செய்ததாக ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் முன்னாள்எம்.எல்.ஏவும் அந்நகராட்சியின் தலைவருமான தாமரைக்கனியைப் போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவராக தாமரைக்கனி உள்ளார். இவர் திமுகவில் இருக்கிறார். இவரது மூத்த மகன்இன்பத்தமிழன் அதிமுக எம்.எல்.ஏவாக உள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை நகராட்சிக்குள் வந்த இன்பத்தமிழன் பொது மக்களிடம் மனு வாங்கினார். எம்.எல்.ஏ.அலுவலகத்தில் மனு வாங்காமல் நகராட்சியில் வந்து மனு வாங்குதைத் தட்டிக் கேட்ட தாமரைக்கனியின் இளையமகன் தங்கமாங்கனியை இன்பத்தமிழனின் ஆதரவாளர்கள் கத்தியால் குத்தினர்.

இதையடுத்து நேற்று நகராட்சியின் அவசரக் கூட்டத்தை தாமரைக்கனி கூட்டினார். அதில் இனி இன்பத்தமிழன்நகராட்சியில் வந்து மனு வாங்கக் கூடாது என்று தீர்மானம் கொண்டு வந்தார் தாமரைக்கனி.

இந்நிலையில் அதிமுக தொண்டரான விஜயகுமார் என்பவரைத் தாக்கி கொலை செய்ய தாமரைக்கனி முயன்றஅவரது மகன் இன்பத்தமிழன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றார்.

ஆனால் உள்ளே தாமரைக்கனி இருந்ததால் நகராட்சியின் வாயில் கதவுகள் மூடப்பட்டன. ஆனாலும் நகராட்சியின்வாயில் அருகிலேயே இன்பத்தமிழன் சுமார் 3 மணி நேரம் நின்று கொண்டே இருந்தார். தாமரைக்கனியைக் கைதுசெய்தே தீரவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து நேற்று மாலை தாமரைக்கனியைப் போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்ட தாமரைக்கனியை 15 நாள் காவலில்வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+