தூத்துக்குடி அருகே ரூ.2,000 கோடியில் தொழிற்சாலை: 3,000 பேருக்கு வேலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டாடா நிறுவனம் சார்பாக தூத்துக்குடி அருகே ரூ.2,000 கோடி முதலீட்டில் டைட்டானியம்-டை-ஆக்சைடுதொழிற்சாலை ஒன்று நிறுவப்படவுள்ளது.

இது தொடர்பாக டாடா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி. முத்துராமன் மற்றும் தமிழக அரசு தொழில்துறைச்செயலர் அருண் ராமநாதன் ஆகியோருக்கு இடையே முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நேற்று(வியாழக்கிழமை) ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தத் தொழிற்சாலை அமைக்கப்படுவதன் மூலம் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த3,000 பேர் வேலை வாய்ப்புப் பெறுவார்கள். இவர்களில் 1,000 பேருக்கு நேரடியாகவும் மீதமுள்ளவர்களுக்குமறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

பெயிண்ட், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிப்புக்குத் தேவைப்படும் டைட்டானியம்-டை-ஆக்சைடுஎன்ற வேதிப் பொருள் தமிழகக் கடற்கரையின் 250 சதுர கி.மீ. பரப்பில் இயற்கையாகவே தாதுப்பொருளாகக்கிடைக்கிறது.

தற்போது வெளிநாடுகளிலிருந்து தான் ஆண்டு தோறும் 30,000 டன் அளவுக்கு இந்த வேதிப் பொருள் இறக்குமதிசெய்யப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போது தூத்துக்குடியில் அமைக்கப்படவுள்ள இந்த ஆலையின் மூலம் ஆண்டுக்கு 60,000 டன் அளவுஇவ்வேதிப் பொருள் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

தற்போது கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தத்தின் மூலம் இந்த ஆலைக்குத் தேவையான 30 மெகாவாட் மின்சாரம்மற்றும் 1.2 கோடி கேலன் தண்ணீரை தமிழக அரசே வழங்குகிறது.

அடுத்த 4 ஆண்டுகளில் இந்த ஆலை தன்னுடைய உற்பத்தியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+