பெண்களை குத்தகைக்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விபச்சாரத்துக்காக இளம் பெண்களை குத்தகைக்கு விட்ட பெண் கைது செய்யப்பட்டார். இவர் தனது கணவர்,மகனுடன் சேர்ந்து இந்த கேவலமான தொழிலில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கீழ்பாக்கம் பூந்தமல்லி ஹைரோட்டில் உள்ள பெனின்சுலா என்ற பிளாட்டில் ஒரு வீட்டில் கடந்த பல ஆண்டுகளாகவிபச்சாரம் நடந்து வந்தது. இதனை இத்தனை காலம் போலீசார் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தனர்.

இப்போது விபச்சாரத்துக்கு எதிராக கடும் நடவடிக்கையில் சென்னை நகர போலீஸ் கமிஷ்னர் விஜய்குமார்இறஙகியுள்ளார். பல பெண்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந் நிலையில் இந்த வீட்டிலும் அதிரடி ரெய்ட் நடந்தது. அப்போது சோனா லட்சுமி (38) என்ற பெண் சிக்கினார்.ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்தப் பெண் நூற்றுக்கும் அதிகமான பெண்களை குத்தகைக்கு விட்டு விபச்சாரத்தில்ஈடுபடுத்தி வந்துள்ளார்.

இந்தப் பெண் முன்பு சென்னை எழும்பூரில் உள்ள ஹோட்டலில் காபரே நடனம் ஆடி வந்தவர் என்றும்தெரியவந்துள்ளது.

ஆந்திராவில் இருந்து பெண்களை சினிமா ஆசை காட்டி அழைத்து வந்து பல செல்வந்தர்களுக்கு 3 மாதம், 6மாதம், 1 வருடம் என்று குத்தகைக்கு விட்டு வந்துள்ளார்.

இந்த குத்தகைக் தொழிலுக்கு இவரது இரண்டாவது கணவர் ரமேஷ், மகன் அஜய் ஆகியோரும் உடந்தையாகஇருந்து வந்துள்ளனர். இவர்கள் சுமார் 100 பெண்களை சென்னை நகரில் மட்டும் குத்தகைக்கு விபச்சாரத்தில்ஈடுபடுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

போலீசார் இவரது வீட்டில் அதிரடியாய் நுழைந்தபோது 10 விபச்சாரப் பெண்கள் அங்கிருந்தனர். அவர்களையும்சோனா லட்சுமியையும் போலீசார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+