தாராபுரம் அருகே சத்துணவு சாப்பிட்ட 100 குழந்தைகள் மயக்கம்
தாராபுரம்:
தாராபுரம் அருகே பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட சுமார் 100 குழந்தைகள் திடீரென்று மயங்கி விழுந்தனர்.
தாராபுரத்தை அடுத்த சிக்கானபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் 113 குழந்தைகளுக்குநாள்தோறும் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) அந்தக் குழந்தைகளுக்கு சுண்டக் கடலையுடன் சத்துணவுவழங்கப்பட்டது.
இதைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே சுமார் 100 குழந்தைகளுக்கு வாந்தியும் வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது.அதன் பிறகு ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழ ஆரம்பித்தனர்.
இதைக் கண்டதும் பதறிப் போன ஊழியர்களும் ஆசிரியர்களும் உடனடியாக அந்தக் குழந்தைகளை தாராபுரம்அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சத்துணவுடன் முட்டைகள் வழங்கப்படுவதைக் கடந்த ஆண்டு நிறுத்திய தமிழக அரசு, அதற்குப் பதிலாக தற்போதுசுண்டக் கடலையை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications