ஆலங்குடி, பட்டமங்கலத்தில் குருப்பெயர்ச்சி ஹோமம்
ஆலங்குடி:
குருப்பெயர்ச்சியையொட்டி இன்று ஆலங்குடி குரு பகவான் ஆலயத்தில் சிறப்பு யாகங்கள் இன்று காலைதொடங்கியது.
இதுவரை மிதுனராசியில் சஞ்சாரித்து வந்த குரு பகவான் இனி கடகராசியில் பிரவேசித்து அங்கேயே சஞ்சாரம்செய்யவுள்ளார்.
தஞ்சவூர் அருகே உள்ள திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுததுள்ளது ஆலங்குடி. இங்குள்ளஆபத்சகாயேஸ்வரர் சுவாமி திருக்கோவில் குரு பகவானின் பரிகாரத் தலமாகும்.
இதையொட்டி இன்று ஆலங்குடியில் இன்று காலை 3.30 மணிக்கு சிறப்பு குருப்பெயர்ச்சி ஹோமங்கள் நடந்தன.பின்னர் காலை 5.30 மணிக்கு சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடந்தன.
இந் நிகழ்ச்சியில் பங்கேற்க லட்சக்கணக்கானோர் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் இருந்தும் ஆலங்குடியில்குவிந்துள்ளனர். இதில் கலந்து கொண்ட மக்கள் தங்கள் ராசிக்கு பரிகாரம் செய்து கொண்டனர்.
இதையடுத்து சிறப்புப் பேருந்துகள் உள்பட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆலங்குடியில்பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்தக் கோவிலில் வரும் 4ம் தேதி முதல் 11ம் தேதி வரை லட்சார்ச்சணை பூஜைகள் நடைபெறவுள்ளன.
பட்டமங்கலம்:
அதே போல சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் உள்ள குரு பகவானின் ஆலயத்திலும் இன்று சிறப்புப்பூஜைகள் நடந்தன.












Click it and Unblock the Notifications