For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை அருகே காலார தாக்குதல்: ஒருவர் பலி- பீதியில் கிராம மக்கள்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரை அருகே உள்ள சேடப்பட்டி அருகே குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் நூற்றுக்கணக்கான மக்களுக்கு காலராநோய் பரவியுள்ளது. ஒருவர் சிகிச்சை பலனிக்காமல் உயிரிழந்துவிட்டார்.

சேடப்பட்டி அருகே உள்ளது வண்டப்புலி கிராமம். இங்கு சமீபத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்தது. இதையறியாதமக்கள் அந்த நீரைப் பருகினர்.

இதனால் அந்த ஊரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களுக்கு காலரா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாந்தி,வயிற்றுப்போக்குடன் இந்த மக்கள் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட வண்ணம் உள்ளனர்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்ளில் கருப்பையா என்பவர் சிகிச்சை பலனிக்காமல் உயிரிந்துவிட்டார்.இதையடுத்து மக்களிடையே பீதியும் பதற்றமும் பரவியுள்ளது.

இதைத் தொடர்ந்து சிறப்பு மருத்துவக் குழுக்கள் அந்த கிராமத்திலேயே முகாமிட்டுள்ளன. இங்கு முதலுதவிசிகிச்சை அளிக்கப்பட்டு மோசமான நிலையில் உள்ளவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X