காமராஜர் பிறந்த நாள் விழா: விடுமுறை தினமாக அறிவிக்க இளங்கோவன் கோரிக்கை
சென்னை:
காமராஜரின் நூற்றாண்டு விழா அடுத்த மாதம் 15ம் தேதி தொடஙகுவதையயொட்டி அன்றைய தினத்தை பொதுவிடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காமராஜர் விருதுநகரில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து தனது தேசப் பற்று காரணமாக மிகப் பெரிய தலைவராகஉயர்ந்தார். பிரதமர்களை தேர்ந்தெடுக்கும் கிங் மேக்கராக அவர் உருவானார்.
தமிழத்தின் முதல்வராக, அகில இந்திய காங்கிரஸ் தலைவராக அவர் தமிழகத்துக்கும் நாட்டுக்கும் பெரும்தொண்டாற்றியுள்ளார்.
அவரது வாழ்க்கை எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பாடம். எனவே, இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் அவரது நூற்றாண்டு விழாவின் தொடக்க நாளான ஜூலை 15ம் தேதியை விடுமுறை தினமாக மத்தியஅரசும், மாநில அரசும் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications