தெரசா பெயரில் நிறுவனங்கள் நடத்தி ரூ. 1 கோடி மோசடி செய்தவர் கைது
அரியலூர்:
அன்னை தெரசாவின் பெயரில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வேலை வாங்கித் தருவதாகக் கூறி மக்களிடம்பணம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
அரியலூரில் அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தையும், கல்விக் கூடங்கள் உள்ளிட்ட பல அமைப்புகளையும்நடத்தி வந்தவர் அசோக் குமார்.
தனது நிறுவனங்களில வேலை வாய்ப்புத் தருவதாகக் கூறி மக்களிடம் ரூ. 50,000 முதல் ரூ. 1 லட்சம் வரை பணம்வசூல் செய்தார். இவரை நம்பி நூற்றுக்கணக்கானவர்கள் பணம் கட்டினர்.
சில கோடிகளை வரை வசூலானதையடுத்து பல மாதங்களுக்கு முன் திடீரென அசோக் குமார் தனதுகுடும்பத்தினருடன் தலைமறைவானார். அவரிடம் ஏமாந்த மக்கள் போலீசாரிடம் புகார் தந்தும் எந்தப் பலனும்ஏற்படவில்லை. இதையடுத்து மாவட்டக் கலெக்டரிடம் மக்கள் ஊர்வலமாக சென்று புகார் தந்தனர்.
இதைத் தொடர்ந்து அசோக் குமாரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. பல இடங்களில் ரகசியமாய் அசோக்குமாரை இந்த போலீஸ் படை தேடி வந்தது.
இந் நிலையில் ஆண்டிப்பட்டியில் அவர் மறைந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆண்டிப்பட்டிக்குச் சென்றஇந்தப் படையினர் அவரை அங்கு வைத்தே பிடித்தனர்.
-->












Click it and Unblock the Notifications