ராஜ்குமார் கடத்தலில் கருணாநிதி, ரஜினியை சேர்க்க அரசு முயற்சி: கோபால் தகவல்
சென்னை:
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் கருணாநிதியையும், ரஜினிகாந்தையும் சேர்க்கும் முயற்சியில் தமிழக அரசுஈடுபட்டுள்ளதால நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால் கூறியுள்ளார்.
உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 10 நாட்களாக அவர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்குஉட்பட்டார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப் பாளையத்தில் உள்ள காவல் நிலையத்தில் வைத்து அவர் விசாரிக்கப்பட்டார்.இந்த விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது. இன்று சென்னை திரும்பிய அவர் பத்திரிக்கையாளர்ளைச் சந்தித்தார்.அவர் கூறுகையில்,
கடந்த 10 நாட்களாக விசாரணை என்ற பெயரில் போலீசார் என்னை துன்புறுத்தினர். மனரீதியிலும், உடல்ரீதியிலும்எனக்கு உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் நடந்து கொண்டனர்.
சித்தரவதை செய்துவிட்டனர். கிட்டத்தட்ட 1000 கேள்விகள் வரை அவர்கள் கேட்டார்கள்.
நக்கீரன் பத்திரிக்கையை இயங்க விடாமல் முடக்குவது தான் அவர்களது கேள்விகளின் நோக்கமாக இருந்தது.
நடிகர் ராஜ்குமார் வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியையும் நடிகர் ரஜினிகாந்தையும் தொடர்புபடுத்தவும்முயற்சி நடப்பதை போலீசாரின் பேச்சிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.
ரஜினி உன்னிடம் என்ன சொன்னார்? காட்டுக்கு அவர் உன்னை போகச் சொன்னாரா? அவருக்கு இதில் ஏன்ஆர்வம் இருந்தது? கருணாநிதி, ரஜினிக்கு இதில் என்ன தொடர்பு? உங்களுக்கும் ரஜினிக்கும் என்ன தொடர்பு, வீரப்பனைசந்திக்க விரும்புவதாக ரஜினி கூறினாரா என்று பல கேள்விகளைக் கேட்டனர். அதற்கு நான், பல தரப்பினரும் காட்டுக்குச் சென்றுராஜ்குமாரை மீட்குமாறு என்னைக் கேட்டுக் கொண்டனர். அதுபோலவே ரஜினியும் கேட்டுக் கொண்டார் என்றேன்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும் பல கேள்விகளை போலீஸார் கேட்டனர். அவரையும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கும்எண்ணம் போலீஸாரிடம் இருப்பதாகவேத் தோன்றுகிறது என்றார் கோபால்.
நக்கீரன் பத்திரிக்கையில் வேலை பார்ப்பவர்கள் விவரம், எனது சொத்துக்கள், எனது வங்கிக் கணக்குகள் உள்பட43 வகையான ஆவணங்களை இன்னும் 10 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும் என்று போலீசார் எனக்கு கெடுவிதித்துள்ளனர் என்றார் கோபால்.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications