For Daily Alerts
Just In
உலகக் கோப்பை கால்பந்து: ஜெர்மனி தோற்றதால் உயிரை விட்ட சென்னை மாணவன்
சென்னை:
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணியிடம் ஜெர்மனி அணி தோற்றதால்அதிர்ச்சியடைந்த சென்னை மாணவன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவன் சதீஷ். பிளஸ் டூ படித்து வந்தான். இவன் தீவிர கால்பந்து ரசிகன்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜப்பானின் ஓகஹாமா நகரில் பிரேசில், ஜெர்மனி அணிகளுக்கு இடையே நடந்த உலகக்கோப்பை கால்பந்து ஆட்டத்தின் இறுதிப் போட்டியை டி.வியில் பார்த்துக் கொண்டிருந்தான் சதீஷ்.
இதில் பிரேசில் அணி 2 கோல்கள் போட்டு அபார வெற்றி பெற்றது. தனது விருப்ப அணியான ஜெர்மனிபரிதாபமாக தோல்வியுற்றதால் பெரும் அதிர்ச்சியடைந்தான் சதீஷ்.
தனது வீட்டுக்குள் சென்ற அவன் அங்கு தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டான்.
-->
Story first published: Tuesday, July 2, 2002, 5:30 [IST]