மீனை "அப்படியே" விழுங்கியவர் சாவு
சென்னை:
சென்னை அருகே உள்ள சிட்லபாக்கம் பகுதியில் உயிருடன் உள்ள மீனை விழுங்கியவர் தொண்டையில் அது சிக்கிபரிதாபமாக இறந்தார்.
சிட்லபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். நண்பர்கள் சிலருடன் குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, சங்கரின் நண்பர்கள், உயிருடன் உள்ள மீனை அப்படியே விழுங்க முடியுமா என்று சவால்விட்டுள்ளனர்.
சவாலை ஏற்றுக் கொண்ட சங்கர், ஒரு மீனை அப்படியே விழுங்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மீன்அவருடைய மூச்சுக் குழலில் சிக்கிக் கொண்டது.
இதனால் மூச்சுத் திணறி சங்கர் பரிதாபமாக இறந்தார்.
நீர் என நினைத்து ஆசிட் குடித்த மூதாட்டி சாவு:
இதற்கிடையே அதே சிட்லபாக்கம் பகுதியில் தண்ணீர் என நனைத்து அமிலத்தைக் குடித்த 70 வயது மூதாட்டிபரிதாபமாக உயிரிழந்தார்.
கண்ணம்மாள் என்ற அந்த மூதாட்டிக்குக் பார்வை சரியாகத் தெரியாது.
இதனால் வீட்டில் வைத்திருந்த பாட்டிலை தண்ணீர் பாட்டில் என நினைத்து அதிலிருந்த அமிலத்தை அவர் குடித்துவிட்டார்.
இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் வழியிலேயேகண்ணம்மாள் பரிதாபமாக இறந்தார்.இந்த இரு சம்பவங்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications