12ம் தேதி வைகோ கைதா?: டெல்லியில் நரேஷ் குப்தா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வருகிற 12ம் தேதி வைகோ சென்னை திரும்பும்போது அவரை பொடா சட்டத்தின் கீழ்கைது செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக மத்திய அரசுடன் விவாதிக்க தமிழக உள்துறைச் செயலாளர் நரேஷ் குப்தா டெல்லி சென்றார். அவர் மத்திய உள்துறைஅமைச்சக அதிகாரிகளுடன் இது தொடர்பாகப் பேசி வருகிறார்.
வைகோ விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசி வருவதால் அவரை பொடா சட்டத்தில் கைது செய்யப் போவதாக துணைப் பிரதமர்அத்வானிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த மிரட்டலுக்கு வைகோ உறுதியானபதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், பிரதமருக்கு மிக நெருக்கமாக உள்ள வைகோவை கைது செய்ய மத்திய அரசு அனுமதி தருமா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications