வைகோவை உடனே கைது செய்ய சுவாமி கோரிக்கை
பாஸ்டன் (அமெரிக்கா):
விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் வைகோவைக் கைது செய்ய ஜெயலலிதாவுக்கு முழு ஆதரவு தருவதாக ஜனதாகட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் உள்ள சுப்பிரமணியம் சுவாமி இது தொடர்பாக அங்கிருந்து அறிக்கைவெளியிட்டுள்ளார். அதன் விவரம்:
தீவிரவாதத்துக்கு எதிரான ஜெயலலிதாவின் போராடத்தை நான் முழு மனதுடன் ஆதரிக்கிறேன். ராஜிவ்காந்தியைக் கொன்றவர்களுக்கு ஆதரவாக வைகோ பேசி வருவதை ஏற்க முடியாது.
லோக்சபா உறுப்பினராக இருந்து கொண்டு நாட்டுக்கு எதிரானவர்களுக்கு ஆதரவு தரும் வைகோவுக்கு எதிராகலோக்சபா சபாநாயகரிடம் அதிமுக எம்.பிக்கள் புகார் தந்து அவருக்கு தண்டனை தரக் கோர வேண்டும்.
வைகோவுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசின் அனுமதிக்காக மாநில அரசு காத்திருக்கக் கூடாது.
வைகோ பேசாமல் யாழ்பாணத்துக்குச் சென்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு தளபதியாகமாறிவிட வேண்டும். அதைவிட்டுவிட்டு தமிழகத்தில் இருந்து கொண்டு தமிழ்நாட்டின் பெயரைக் கெடுக்கக்கூடாது. பாராத மாதாவுக்கு களங்கம் விளைவிக்கக் கூடாது.
தமிழ் தேசிய மீட்புப் படை, தமிழ் தேச விடுதலைப் படை ஆகிய அமைப்புகளுக்குத் தடை விதிக்க ஜெயலலிதாஎடுத்த நடவடிக்கைகள் மிகுந்த பாராட்டுக்குரியவை. இந்த விஷயத்தில் மிகுந்த தேசப்பற்றுடன் செயல்பட்டுள்ளார்ஜெயலலிதா.
ஆனால், முன்பு முதல்வராக இருந்த கருணாநிதி இந்த அமைப்புகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை என்று சுவாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.