வைகோ பேசியது என்ன?
சென்னை:
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கடந்த ஜூன் 29ம் தேதி இரவு பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளுக்குஆதரவாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதைக் கண்டித்து மத்திய அரசுக்கு தமிழக முதல்வர்ஜெயலலிதா புகார் கடிதம் எழுதியுள்ளார்.
திருமங்கலம் கூட்டத்தில் வைகோ பேசியதாவது:
நேற்று நான் விடுதலைப் புலிகளை ஆதரித்தேன். இன்றும் ஆதரிக்கிறேன். நாளையும் கூட அவர்களைத் தொடர்ந்துஆதரிப்பேன்.
பொடா குறித்து எனக்குக் கவலையில்லை. பொடாவை விட பயங்கரமான சட்டங்களை எல்லாம் பார்த்தவன் நான்.
புலிகளுக்கு நான் ஆதரவாளன் என்பது எல்லோருக்கும் தெரியும். லோக்சபாவில் கூட என்னுடைய புலிகள்ஆதரவுப் பேச்சை பா.ஜ.கவினர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
புலிகளைத் தீவிரவாதிகள் என்கிறீர்களே. அவர்கள் என்ன வன்முறைக்காகவா இது போன்ற செயல்களில்ஈடுபட்டார்கள்? அல்லது, ஆயுதக் கலாச்சாரத்தைக் கொண்டு வருவதற்காகவே அவர்கள் ஆயுதங்களைஎடுத்தார்காள?
புலிகளுடைய போராட்டங்களின் பின்னணியிரும் தியாகங்களின் பின்னணியிலும் ஒரு வரலாறு உள்ளதே. அதுஉங்களுக்குத் தெரியவில்லையா?
எத்தனை தமிழர்கள் நசுக்கப்பட்டனர்? எத்தனை தமிழ் பெண்கள் சீரழிக்கப்பட்டனர்? அவர்களுக்குதமிழர்களாகிய நாம் நம்முடைய ஆறுதலைக் காண்பிக்க வேண்டாமா?
நமது கவலைகளைப் பகிர்ந்து கொள்வது நல்லது. நமது பெண்களின் எதிர்காலத்துக்காக நமது அக்கறையைக்காட்டுவது நியாயமானது என்று அக்கூட்டத்தில் பேசினார் வைகோ.
-->