தேவையில்லாத கைது மிரட்டல்: நெடுமாறன் கருத்து
கோயம்புத்தூர்:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப் போவதாக முதல்வர் ஜெயலலிதாமிரட்டல் விடுத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. வைகோவை பழி வாங்கும் விதத்திலேயே அவர் இவ்வாறுகூறியுள்ளார் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறினார்.
கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
விடுதலைப் புலிகள் குறித்தோ அல்லது பிற தமிழ் அமைப்புகள் குறித்தோ கருத்துக் கூற யாருக்கும் உரிமை உண்டு.அது நமது அடிப்படை உரிமை. அதைத் தடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது.
வைகோ மீது தேவையில்லாமல் புகார் கூறியுள்ளார் ஜெயலலிதா. அவரைப் பழி வாங்குவதற்காகவே பொடாசட்டத்தின் கீழ் கைது செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார் அவர். இதை அனைத்துத் தரப்பினரும் ஒன்றுசேர்ந்து கடுமையாக கண்டிக்க வேண்டும்.
கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியத்தைப் பார்க்கவே நான்இப்போது கோவை வந்துள்ளேன். அவர் மீதான வழக்கை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.ராஜ்குமார் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கொளத்தூர் மணியையும் விரைவில் விடுதலை செய்யவேண்டும் என்றார் நெடுமாறன்.