வைகோ கைது விவகாரத்தில் திமுக தலையிடாது: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது விவகாரத்தில் நான் தலையிட மாட்டேன் என்று திமுக தலைவர்கருணாநிதி கூறினார்.

இன்று திருச்சியில் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி,

விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக வைகோவை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப் போவதாகத்தமிழக அரசு மிரட்டி வருகிறது.

ஆனால் வைகோ கைது செய்யப்பட்டால் அந்த விவகாரத்தில் நான் தலையிட மாட்டேன். இது தொடர்பாக துணைப்பிரதமரான என்னுடைய நண்பர் அத்வானியிடமும் எந்தவிதத்திலும் முறையிட மாட்டேன்.

இருந்தாலும் அரசியல் பழிவாங்கலுக்காக இந்தப் பொடா சட்டம் பயன்படுத்தப்படுவதை திமுக தொடர்ந்துஎதிர்க்கும்.

கடந்த ஆண்டு என்னை அதிமுக அரசு கைது செய்த போது நான் நடித்ததாகக் கூறி மதிமுகவினர் கேலி செய்தனரேஒழிய அந்தக் கைதைக் கண்டிக்கவே இல்லை என்றார் கருணாநிதி.

"தமிழகத்தில் புலிகள் நடமாட்டத்தை ஏற்க முடியாது":

இதற்கிடையே புலிகளை ஆதரிக்கக் கூடாது என்று வைகோவை எச்சரிக்கை செய்வதோடு நிறுத்திக் கொள்ளலாம்என்று தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல. கணேசன் கூறினார்.

இன்று நிருபர்களிடம் கணேசன் கூறியதாவது:

இலங்கைப் பிரச்சனையில் தீர்வு ஏற்பட வேண்டும் என்று பா.ஜ.கவுக்கு எப்போதுமே அக்கறை உண்டு.

ஆனால் தடை செய்யப்பட்டுள்ள புலிகள் இயக்கத்தின் நடமாட்டம் தமிழகத்தில் இருப்பதை அனுமதிக்க முடியாது.புலிகளைப் பற்றி தமிழகத்தில் பேச வேண்டிய அவசியமும் இல்லை.

இதுவரை புலிகளை ஆதரித்துப் பேசி வந்த வைகோவை எச்சரிக்கை செய்வதோடு நிறுத்திக் கொள்ளலாம் என்றுகணேசன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+