காவிரி: நாளை பிரதமருக்கு கர்நாடகம் பதில்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

தமிழகத்துக்கு காவிரியில் நீர் விடுமாறு பிரதமர் வாஜ்பாய் விடுத்த கோரிக்கை குறித்து நாளை கர்நாடகஅமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இதன் பின்னர் கர்நாடகம் தனது பதிலை பிரதமருக்குஅளிக்கும்.

12 நாட்களுக்கு முன் பிரதமர் வாஜ்பாய் இந்த கோரிக்கையை கர்நாடகத்திடம் முன் வைத்தார். ஆனால், இப்போதுபதில் சொல்வோம்.. பின்னர் பதில் சொல்வோம் என்று கர்நாடகம் காலம் கடத்தி வருகிறது.

எங்களிடம் போதிய அளவு தண்ணீர் இல்லை, இதனால் தமிழகத்துக்குத் தண்ணீர் தர முடியாது என்று முதல்வர்கிருஷ்ணா கூறியுள்ளார். ஆனால், பிரதமரிடம் இன்னும் தனது பதிலைத் தெரிவிக்கவில்லை.

இந் நிலையில் நாளை கர்நாடக அமைச்சரவை கூடுகிறது. இதில் பிரதமரின் கோரிக்கை தொடர்பாகவிவாதிக்கப்பட்டு அவருக்கு பதில் அனுப்பப்படும் என சட்டத்துறை அமைச்சர் சந்திரே கெளடா இன்றுபெங்களூரில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், இப்போதுள்ள நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் தரும் சூழலில் கர்நாடகம் இல்லை. காவிரியின்குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர், ஹாரங்கி, ஹேமாவதி, கபினி ஆகிய அணைக்கட்டுகளில் தண்ணீர்போதுமான அளவு இல்லை.

இரு நாட்களாகத் தான் காவிரி நதி நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.

எங்களது அணைகளின் நிலைமை குறித்து எப்போது வேண்டுமானாலும் நதி நீர் நடுவர் மன்றம் வந்துபார்வையிடலாம் என்றார் சந்திரே கெளடா.

இதன்மூலம் தமிழகத்துக்கு தண்ணீர் விட முடியாது என்ற பதிலைத் தான் நாளை பிரதமர் வாஜ்பாய்க்கு கர்நாடகம்அனுப்பவுள்ளது என்பது தெளிவாகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+