சேர்களை தூக்கி வீசி சண்டை போட்ட பெண் கவுன்சிலர்கள்

Subscribe to Oneindia Tamil

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகராட்சியில் பெண் கவுன்சிலர்கள் இடையே பயஙகர மோதல் நடந்தது. பெண் கவுன்சிலர்களைசேர்களை தூக்கி வீசி, ஆண் கவுன்சிலர்களுக்கு தாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்பதைநிரூபித்தனர்.

வழக்கமாக ஆண் கவுன்சிலர்கள் தான் டேய்.. வாடா வெளியே.. சவுண்டு விட்டு சேர்களைத் தூக்கி பெளலிங்போடுவார்கள். நகராட்சித் தலைவரின் மேஜையை உருட்டி விளையாடுவார்கள். இதைப் பார்த்து பெண்கவுன்சிலர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடுவார்கள்.

ஆனால், கோவில்பட்டியில் எதிர்ப்பதமான சம்பவம் நடந்தது. நகராட்சிக் கூட்டம் தொடங்கியவுடன் வளர்ச்சிப்பணிகள் தொடர்பாக அதிமுக பெண் கவுன்சிலருக்கு எதிராக சில எதிர்க் கட்சிப் பெண் கவுன்சிலர்கள் கருத்துத்தெரிவித்தனர்.

இதையடுத்து அதிமுக பெண் கவுன்சிலர்கள் பாயந்து ஓடி வந்த எதிர்க் கட்சி கவுன்சிலர்களுடன் மோதினர். உடனேஅனைத்து எதிர்க் கட்சி பெண் கவுன்சிலர்களும் ஒன்று சேர்ந்து அதிமுக பெண் கவுன்சிலர்களைப் பார்த்துஒருமையில் திட்டினர்.

இரு தரப்பினரும் கை நீட்டி வாடி... போடி.. என ஏக வசனத்தில் பேசினர். இந் நிலையில் யாரும் எதிர்பாராதநிலையில் சில பெண் கவுன்சிலர்கள் பிளாஸ்டிக் சேர்களைத் தூக்கி வீசினர். இதனால் ஆண் கவுன்சிலர்கள்செய்வதறியாது திகைத்து நின்றனர்.

சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த நகராட்சித் தலைவர் வனிதா ரமணி இடத்தைக் காலி செய்துவிட்டு கூட்டத்தைபாதியிலேயே விட்டுவிட்டு ஓடினார்.

தொடர்ந்து சேர்களை பறக்கவிட்டு ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்த பெண் கவுன்சிலர்கள் நீண்ட நேரத்துக்குப்பின்னர் தான் அமைதியாகினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+