தூங்கிக் கொண்டிருந்தவர் சுட்டுக் கொலை
தர்மபுரி:
தர்மபுரியில் கோவில் திருவிழா தொடர்பாக எழுந்த மோதலில் ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது சுட்டுக்கொல்லப்பட்டார்.
தர்மபுரி அருகே உள்ள பிக்கிலி மலை பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். அடாவடி ஆசாமியான இவருக்கும்இந்தப் பகுதியில் உள்ள சிலருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது.
இந் நிலையில் ஊர் கோவில் திருவிழா வந்தது. இந்தத் திருவிழாவையொட்டி ராமகிருஷ்ணனுக்கும் எதிர்தரப்பினருக்கும் இடையே மோதல் எழுந்தது. வாய்த் தகராறு நடந்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
பின்னர் இரவு தனது வீட்டின் வெளியே ராமகிருஷ்ணன் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரை சிலர் துப்பாக்கியால்சுட்டுவிட்டு ஓடிவிட்டனர்.
இதில் ராமகிருஷ்ணன் படுக்கையிலேயே உயிர் விட்டார். சுட்டவர்கள் யார் என்று தெரியவில்லை.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிறிய கிராமத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் அளவுக்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது தான் அதிர்ச்சியைத்தருகிறது.












Click it and Unblock the Notifications