பஸ் ரிப்பேர்: நடு ரோட்டில் தவித்த பயணிகளுக்கு உதவிய ஜெயலலிதா
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம் அருகே நடுப் பாலத்தில் பிரேக் டவுன் ஆகி நின்ற பஸ்ஸை தள்ளிக் கொண்டிருந்தபயணிகளைப் பார்த்த முதல்வர் ஜெயலலிதா, தனது காரை நிறுத்தி பயணிகளுக்கு மாற்று பஸ்சை ஏற்பாடு செய்து கொடுத்து விட்டுதனது வீட்டிற்குச் சென்றார்.
பெசன்ட் நகரிலிருந்து பெரம்பூர் வரை செல்லும் 29 சி பஸ் வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன்சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று பிரேக் டவுன் ஆகி நடுப்பாலத்தில் நின்றுவிட்டது. அந்த நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா கோட்டையிலிருந்து தனது இல்லம் உள்ள போயஸ் கார்டன் பகுதிக்கு வந்துகொண்டிருந்தார்.
முதல்வரின் கார் பாலத்தை அணுகியபோது, நடுப்பாலத்தில் பஸ் நின்று கொண்டிருப்பதையும் பயணிகள் அனைவரும் கீழேஇறங்கி பஸ்சை தள்ளிக் கொண்டிருப்பதையும் பார்த்து தனது காரை பஸ் அருகே நிறுத்தினார்.
வெயிலில் பஸ்சை தள்ளிக் கொண்டிருந்த பயணிகள் முதல்வர் தங்களை நோக்கி வருவதைப் பார்த்ததும் அடிக்கடி இப்படி ஆகிவிடுகிறது மேடம், நீங்கள்தான் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
பஸ்சின் டிரைவரிடம் என்ன நடந்தது என்று ஜெயலலிதா கேட்டார். என்ஜினில் ஆயில் பிளாக் எற்பட்டுள்ளதாக டிரைவர் கூறவேஉடனடியாக இன்னொரு பஸ்சை இந்த இடத்திற்குக் கொண்டு வருமாறு தனது செயலாளர் மூலமாக பெசன்ட் நகர் டிப்போவுக்குஉத்தரவிட்டார்.
உத்தரவு சென்ற சில நிமிடங்களில் உடனடியாக மாற்று பஸ் டிப்போவில் இருந்து கிளம்பியது. இதையடுத்து உங்களுக்காகஇன்னொரு பஸ் வந்து கொண்டுள்ளது. அதில் ஏறிச் செல்லுங்கள் என்று பயணிகளிடம் புன்முறுவலுடன் கூறிய ஜெயலலிதாபின்னர் தனது காரில் ஏறி வீட்டுக்குப் போனார்.
இதனால் மகிழ்ந்து போன பஸ் பயணிகள் ஜெயலலிதாவை வாழ்த்தி கோஷமிட்டனர்.












Click it and Unblock the Notifications