தமிழகத்துக்கு நீர் தர முடியாது: பிரதமருக்கு கர்நாடகம் பதில்
பெங்களூர்:
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் வழங்க முடியாது என பிரதமர் வாஜ்பாய்க்கு பதில் அனுப்ப கர்நாடக அரசுமுடிவெடுத்துள்ளது.
கடந்த 13 தினங்களுக்கு முன் காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்துவிட்டு தமிழக பயிர்களை காக்குமாறுபிரதமர் வாஜ்பாய் கர்நாடக முதல்வருக்கு தொலைபேசி மூலம் உத்தரவிட்டார்.
ஆனால், அப்போதே தண்ணீர் விட முடியாது என்று கூறிய கர்நாடக முதல்வர் கிருஷ்ணா இன்று தான் பிரதமருக்குதனது பதிலை அனுப்புகிறார்.
இன்று காலை பெங்களூரில் அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமருக்கு பதில் அனுப்புவது குறித்துவிவாதிக்கப்பட்டது. இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய கிருஷ்ணா,
கர்நாடகம் மிக இக்கட்டான சூழலில் இருப்பதால் நீரைத் தரும் நிலையில் இல்லை என்பதை பிரதமருக்கு இன்றுதெரிவிப்போம். கர்நாடக அணைக்கட்டுகளில் உள்ள நீர் அளவு குறித்தும், எவ்வளவு நீர் அணைகளுக்கு வந்துகொண்டிருக்கிறது என்றும் அவரிடம் விளக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications