வைகோவுக்கு எதிராக சந்திரிகா சதி
ஈரோடு:
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் ஆலோசனையின் பேரில்தான் வைகோவை பொடா சட்டத்தில் கைது செய்யமுதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளாக மதிமுக ன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி கூறியுள்ளார்.
பொடோ வழக்கின் கீழ் கணேசமூர்த்தி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய கணேசமூர்த்தி, வைகோ மீது பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதன்பின்னணியில் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா இருப்பதாக சந்தேகப்படுகிறோம்.
இந்தியாவிலேயே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் ஒரே தலைவர் வைகோ மட்டுமே. இதன் காரணமாகவேஅவரை ஒடுக்க ஜெயலலிதாவிடம் சந்திரிகா கோரிக்கை வைத்திருக்கலாம் என்று நம்புகிறோம்.
சந்திரிகாவைப் போலவே, விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே அமைதித் தீர்வு ஏற்படுவதைஜெயலலிதாவும் விரும்பவில்லை. ஈழத்தமிழர் நலனும், விடுதலைப் புலிகளும் பிரிக்க முடியாத அம்சங்கள்.
புலிகள் இல்லாவிட்டால் இன்று ஈழத் தமிழர்களுக்கு இந்த அளவுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்காது, அமைதித் தீர்வும்ஏற்பட்டிருக்கப் போவதில்லை. இதை மற்ற போராளிக் குழுக்களே ஏற்றுக் கொண்டுவிட்டன.
மதிமுகவைப் பொருத்தவரை ஈழத் தமிழர்களின் போராட்டத்தை ஆதரிக்கிறோம். தமிழகத்தில் நாங்கள் ஒருபோதும்வன்முறையில் ஈடுபட்டதில்லை. விடுதலைப் புலிகள் தமிழகத்தில் செயல்படுவதையும் நாங்கள் ஆதரித்ததில்லை. இலங்கைத்தமிழர்களை ஆதரிக்கிறோம் என்பதற்காகவே எங்கள் மீது வழக்குப் போடுவதற்கு தமிழக அரசுக்கு எந்தவித உரிமையும் இல்லைஎன்றார் அவர்.