மனைவி பிரிந்து சென்றதால் குடிகாரக் கணவர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
குடிகார கணவன் திருந்ததால் அவரை விட்டுப் பிரிந்து தாய் வீட்டுக்குப் போனார் மனைவி. இதனால் வெறுத்துப் போன கணவர்தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தாம்பரம் ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.கிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இது நாளுக்கு நாள் அதிகரித்து, "மப்பு"டன்தான் தினசரி வீட்டுக்கு வருவார்.
கணவரைத் திருத்த பல முயற்சிகளை எடுத்தார் விஜயலட்சுமி. ஆனால், அவர் திருந்தவில்லை. இதனால் வெறுப்படைந்தவிஜயலட்சுமி, குழந்தைகளையும் உடன் அழைத்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்குப் போய் விட்டார்.
மனைவி, குழந்தைகள் போன துக்கம் தாங்காத கிருஷ்ணன் வீட்டின் உத்தரத்தில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications