காவிரி விவகாரம்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
சென்னை:
காவிரி ஆணையக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுமாறு பிரதமர் வாஜ்பாய்க்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம்எழுதியுள்ளார்.
அதில் கருணாநிதி கூறியிருப்பதாவது:
தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி நடுவர் மன்றத்தின்இடைக்காலத் தீர்ப்பை அமலாக்குவதற்காகத் தான் உங்கள் தலைமையில் காவிரி நதி நீர் ஆணையம்அமைக்கப்பட்டது.
ஆனால், நடுவர் மன்றத்தின் தீர்ப்பை கர்நாடகம் மதிக்காமல் இருந்து வருகிறது. இந்தத் தீர்ப்புப்படி தர வேண்டியநீரை தமிழகத்துக்குத் தராததால் காவிரிப் பாசன விவசாயிகள் பெரம் துயரத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் உடனடியாக காவிரியில் 3 டி.எம்.சி. நீரைத் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு நீங்கள் உத்தரவிட்டதற்குமிகுந்த நன்றி. ஆனால், உங்கள் வேண்டுகோளை கர்நாடகம் ஏற்கவில்லை.
எனவே, காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாகக் கூட்டி நீர் கிடைக்கச் செய்து தமிழக விவசாயிகளுக்கு உதவவேண்டும்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.
கர்நாடகம் இன்று பதில்:
இந் நிலையில் காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடுகிறது. இதில்பிரதமருக்கு அனுப்ப வேண்டிய பதில் குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.
நீர் விடுவது குறித்து பேசப்படப் போவதில்லை. ஏனென்றால் நீர் தர முடியாது என்று முதல்வர் கிருஷ்ணா மிகத்தெளிவாக பலமுறை கூறிவிட்டார்.
இந்த பதிலை வாங்கிக் கொண்டு பிரதமர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications