மலேசியாவில் குழந்தைகளை கடத்தி விற்ற கும்பல் கைது
கோலாலம்பூர்:
மலேசியாவில் குழந்தைகளைக் கடத்தி விற்று வந்த பெரும் கடத்தல் கும்பல் பிடிபட்டுள்ளது.
போர்னியோ தீவின் காவல்துறை தலைவர் முகம்மத் யூசுப் ஜாபர் கூறுகையில்,
கடந்த 6 ஆண்டுகளாகவே இந்தக் கடத்தல் நடந்து வந்துள்ளது. குழந்தைகள் இல்லாத தம்பதிகளிடம் இந்தக்கும்பல் குழந்தைகளை விற்று வந்துள்ளது.
குழந்தைகளை 4000 ரிங்கிட் (1,052 டாலர்) முதல் 18,000 ரிங்கிட் (4,736 டாலர்) விலைக்கு விற்பனைசெய்துள்ளனர்.
இந்தக் குழந்தைகள் கடத்தும் கும்பலில் 30 பேர் உள்ளனர். இப்போது 7 பேர் மட்டுமே பிடிபட்டுள்ளனர்.இவர்களிடம் இருந்து 13 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன என்றார்.
மருத்துவமனைகள், வீடுகள் என பல இடங்களை குழந்தைகளை இந்தக் கும்பல் திருடி, கடத்தி, விற்று வந்துள்ளது.இவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
போர்னியோ தீவு இந்தோனேஷியாவுக்கும் புருனேவுக்கும் சொந்தமான தீவாகும். இரு நாடுகளும் இதை பிரித்துதங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.












Click it and Unblock the Notifications