மிரட்டல், உருட்டலுக்கு மதிமுக பணியாது: அமைச்சர்கள்
சென்னை:
வைகோவைக் கைது செய்தால், அதைச் சந்திக்கத் தயார் என்று மதிமுக கூறியுள்ளது.
அக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்தது. அதில் புலிகளைதொடர்ந்து ஆதரிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மதிமுக மத்தியஅமைச்சர்காளான கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் கூறுகையில்,
அதிமுக ஆட்சியில் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதை எல்லாம் திடை திருப்ப எதிர்க் கட்சிகளைஅழிக்க முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார். மதிமுகவின் விமர்சனத்தை ஜெயலலிதாவால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.
இதனால் அடக்குமுறை அரசியலை கையில் எடுத்துள்ளார். இந்த அச்சுறுத்தல், மிரட்டலுக்கு எல்லாம் நாங்கள்பணியப் போவது இல்லை. மதிமுகவை மிரட்டி, உருட்டி பணிய வைத்துவிடலாம் என்று ஜெயலலிதா பகல் கனவுகாண்கிறார்.
எங்கள் தலைவர் வைகோ மீது எப்.ஐ.ஆர். போட்டுள்ளார்கள். இனி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,கைது தொடர்பாக நடவடிக்கையை தொடங்க வேண்டும். அரசு என்ன செய்கிறது என்று பார்த்து எங்களதுநடவடிக்கைகள் அமையும்.
வைகோ கைது செய்யப்பட்டுவிடுவார் என்று நாங்கள் பயப்படவில்லை. மத்திய அரசிடம் போய் எங்களுக்குஉதவியும் கேட்க மாட்டோம். எங்களுக்கு வந்த சவாலை நாங்களே சந்திப்போம். இங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது பிரதமருக்கும் துணைப் பிரதமர் அத்வானிக்கும் நன்றாகவே தெரியும்.
பஸ் மறியல் செய்வது, கடை அடைக்கச் சொல்வது, அரசு சொத்துக்களை சேதப்படுத்துவது, உருவப் பொம்மைஎரிப்பது போன்ற எந்தவொரு செயலிலும் மதிமுக ஈடுபடாது. மதிமுக தொண்டர்கள் கட்டுக் கோப்புடன் இருக்கவேண்டும் என்றனர்.












Click it and Unblock the Notifications