பிளஸ் டூ மாணவன் தற்கொலை: ஆசிரியர் கைது
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் டூ படித்து வந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.இதையடுத்து தற்கொலைக்குத் தூண்டியதாக ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொட்டரத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தவர் சுரேஷ்வரன். அங்கு படித்தபோது பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேர்சுரேஷ்வரனை அடிக்கடி அடிப்பதும், திட்டுவதுமாக இருந்துள்ளனர்.
இதையடுத்து அந்தப் பள்ளியிலிருந்து விலகி தென்தாமரைக்குளத்தில் உள்ள வேறொரு பள்ளியில் சேர்ந்தார் சுரேஷ்வரன்.
வேறு பள்ளிக்கு மாறிய பின்னும் சுரேஷ்வரன் குறித்து அவர் படித்து வந்த பள்ளி மாணவர்களிடம் கொட்டாரம் பள்ளியின்ஆசிரியர் முருகேசன் தவறான தகவல்களைப் பரப்பி வந்துள்ளார்.
இதனால் மனம் உடைந்த மாணவன் சுரேஷ்வரன் தனது வீட்டிற்கு சென்று விஷம் அருந்தி புதன்கிழமை இறந்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீஸார் ஆசிரியர் முருகேசனை கைது செய்தனர்.