வைகோ கைது செய்ய பா.ஜ.க எதிர்ப்பு, காங்கிரஸ் ஆதரவு
டெல்லி:
பொடோ சட்டத்தின் கீழ் வைகோவை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என பாரதீய ஜனதா கட்சிகூறியுள்ளது.
அதே நேரத்தில் வைகோவை கைது செய்வதை காங்கிரஸ் ஆதரித்துள்ளது.
பா.ஜ.கவின் புதிய தலைவரான வெங்கைய்யா நாயுடுவும், செய்தித் தொடர்பாளருமான அருண் ஜேட்லி இருவரும்வைகோ கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
திருப்பதியில் நிருபர்களிடம் நாயுடு கூறுகையில், புலிகள் விஷயத்தில் வைகோவின் கருத்துக்களை பா.ஜ.க.ஆதரிக்கவில்லை. ஆனால், அவரைக் கைது செய்யும் தமிழக அரசின் திட்டத்தையும் ஆதரிக்க முடியாது. அவரைக்கைது செய்யக் கூடாது.
பொடோ சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது மிகத் தவறான முடிவாகும் என்றார்.ஜேட்லி கூறுகையில், முதலில் வைகோவுடன் பேசிய பின்னர் தான் எதையும் கூற முடியும். இலங்கை விவகாரத்தில்தான் அவர் புலிகளை ஆதரித்து பேசி வருகிறார். தமிழகத்தில் அவர் புலிகளின் செயல்பாட்டை ஆதரிக்கவில்லை.இதை வைத்து அவரை கைது செய்வது சரியல்ல என்றார்.
காங்கிரஸ் ஆதரவு:
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்பால் ரெட்டி கூறுகையில்,
வைகோ குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ள கருத்துக்களை காங்கிரஸ் முழுமையாக ஆதரிக்கிறது.அவரது நடவடிக்கைகளையும் ஆதரிக்கிறோம் என்றார்.