காஞ்சி மடத்தில் சங்கராச்சாரியாரிடம் ஆசி பெற்றார் கலாம்
காஞ்சிபுரம்:
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அப்துல் கலாம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காஞ்சிபுரம் சென்றுசங்கராச்சாரியார் சுவாமிகளிடம் ஆசி பெற்றார்.
காஞ்சி சுவாமிகளான ஸ்ரீஜெயேந்திரர் மற்றும் ஸ்ரீவிஜயேந்திரர் ஆகிய இருவரையும் சந்தித்துப் பேசி ஆசி பெற்றார்கலாம். பின்னர் ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் நிருபர்களிடம் கூறியதாவது:
அரசியல் கலப்பே சிறிதும் இல்லாத அப்துல் கலாம் மதத்தின் மீது பற்று கொண்டுள்ள போதிலும் அதில் வேகம்காட்ட மாட்டார். அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துபவர்.
நம் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லத் திறன் படைத்தவர். பொருளாதார ரீதியிலும் அவர் நாட்டைமுன்னேற்றிச் செல்லக் கூடியவர்.
அணு விஞ்ஞானம் தவிர அனைத்துத் துறைகளையும் கலாம் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார். அணுகுண்டுவெடிப்பது மட்டும் விஞ்ஞானம் அல்ல.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வாலாஜாபாத் ஒன்றியத்தில் பசுமைப் புரட்சியின் மூலம் 30 விவசாயிகளை கலாம்உருவாக்கினார். தற்போது அவருடைய முயற்சியில் 550 விவசாயிகள் இதன் மூலம் உருவாகியுள்ளனர் என்றார்ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள்.












Click it and Unblock the Notifications